ஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர்களுக்குள் சண்டை-துப்பாக்கியால் சுட்ட நபர் கைது
ஈரோடு: ஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
ஈரோட்டைச் சேர்ந்த குருசாமி மேட்டூர் ரோடு அபிராமி தியேட்டர் எதிரில் லாட்ஜ் நடத்தி வருகிறார். இவர் ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்ஜ் நடத்தி வருபவரும் பைன்சியருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான வைரவேலிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
ஸ்டேட் வங்கியில் வாங்கிய ரூ. 1 கோடி கடனை அடைக்க குருசாமிக்கு ரூ. 1 கோடி தருவதாகக் கூறிய வைரவேல், முதல் தவணையாக ரூ. 5 லட்சத்தைத் தந்தார்.
இந்தக் கடனுக்கு வட்டி கட்டி வந்த குருசாமி, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி செலுத்தி விடுவதாகவும், லாட்ஜின் மீது எழுதி கொடுத்த பவர் பத்திரத்தை திரும்ப கொடுக்குமாறும் வைரவேலிடம் கூறினார்.
ஆனால், எனக்கு பவர் பத்திரத்தில் எழுதி கொடுத்தபடி, லாட்ஜை கொடுத்து விடு என்று குருசாமியை வைரவேல் மிரட்டியதால் தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் குருசாமியின் லாட்ஜுக்கு வந்த வைரவேல், பவர் பத்திரத்தில் எழுதி கொடுத்தபடி லாட்ஜை எனக்கு எழுதி கொடுத்து விடு என்று கூறி தகராறு செய்தார்.
இதையடுத்து வைரவேல் மீது புகார் செய்ய குருசாமி, ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதனால் கோபமடைந்த வைரவேல் தனது கைத் துப்பாக்கியால் லாட்ஜில் இருந்த குருசாமியின் மகன் பிரகாஷை சுட முயன்றார். சுதாரித்து கொண்ட பிரகாஷ், வைரவேலின் கையைத் தட்டி விட்டார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய இரண்டு தோட்டாக்கள், லாட்ஜின் வரவேற்பு அறையின் மேல் கூரையை துளைத்துக் கொண்டு சென்றன.
விரைந்து வந்த போலீசார் வைரவேல் மற்றும் அவருடன் வந்திருந்த கோபி, ஜீவானந்தம், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications