தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிக்கக்கூடாது: பிரகாஷ் கரத்
டெல்லி: வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கூறியதாவது:
2008 ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியை தொடர்ந்து, வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது என்று மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு எடுத்து இருக்கிறது. இது நல்ல முடிவு அல்ல.
தனியார் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதித்தால் அந்த வங்கிகளில் இருந்து அந்த நிறுவனங்களே அதிக அளவில் கடன் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் பல நிதி முறைகேடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த 1969ம் ஆண்டு வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கையை இந்திரா காந்தி மேற்கொண்டார். ஆனால் இப்போது, வங்கிகள் தொடங்க பெரிய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து இருப்பது முன்பு இந்திராகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிரானது ஆகும்.
எனவே வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
தற்போது பொதுத்துறை வங்கிகள் கிராமப்புறங்களிலும் தங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்து முறையில் செயல்பட்டு வருகின்றன," என்றார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications