கரூரில் ப.சிதம்பரம் பிறந்த விழாவில் பங்கேற்ற காங்.நிர்வாகி மாரடைப்பில் மரணம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பி்ச்சைமுத்து மாரடைப்பால் இறந்தார்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் பொதுக் கூட்டம் காமாட்சியம்மன்கோயில் தெருவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

கூட்ட நிறைவில் கரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிச்சைமுத்து நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் பிச்சைமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+