எல்லா மக்களும் வாங்கும் வகையில் மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல் விருப்பம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: எல்லா மக்களும் மருந்துகளை வாங்கும் வகையில், குறைந்த வகையில் மருந்துகளை விற்க வேண்டும் என, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் 71வது சர்வதேச மருந்து கூட்டமைப்பு மாநாட்டை பிரதீபா பாட்டீல் துவக்கி வைத்தார். 5 நாட்கள் நடக்க உள்ள இந்த மாநாட்டில், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் பிரதிபா பாட்டீல் பேசியதாவது, இந்திய மருத்துவத் துறை, உலக அளவில் 3வது இடத்தை பெற்றுள்ளது. இந்த நிலை வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும். நாட்டு மக்களின் உடல்நலன், உயிர் பாதுகாப்பு ஆகியவை மருந்துகளில் தான் அடங்கியுள்ளது.

எனவே மருந்து தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் 50 சதவீத மருந்துகள் தவறான முறையில் எழுதி கொடுக்கப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் நடப்பதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறையால், அவற்றை உட்கொள்கிறவர்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுகின்றன.

இந்திய மருத்துவத் துறை வேகமாக வளர்ந்து வந்தாலும், அதிக மக்கள் கொண்ட நம் நாட்டில் எல்லா மக்களுக்கு மருந்து சரியாக சென்று சேர்வதில்லை. அதற்கு அவற்றின் விலை நிர்ணயமும் ஒரு காரணமாக உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில், மருந்துகளின் விலைகளை நிர்ணயிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+