நில விற்பனை: டிஎஸ்.பி. முன் தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியசாமி ஆஜர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியசாமியை நிலவிற்பனை தொடர்பான விவகாரத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக டி.எஸ்.பி. சசிகலா விசாரித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரது நிலம், பல ஆண்டுகளுக்கு முன்பு வேறு சிலருக்கு விற்கப்பட்டது. அதை விற்றுக் கொடுத்ததில், தி.மு.க., மாவட்ட செயலாளர் பெரியசாமி முக்கிய பங்கு வகித்தார். அந்த நில விற்பனையில் ராஜாராமுக்கு, மீதம் தரவேண்டிய 50 லட்சம் ரூபாயை, நிலம் வாங்கியவர்கள் தரவில்லை.

இது குறித்து அவர், தி.மு.க., மாவட்டச் செயலாளரும், திமுக தலைவரால் முரட்டு பக்தர் என்று வர்ணிக்கப்பட்டவருமான பெரியசாமி உள்ளிட்டோர் மீது, தூத்துக்குடி எஸ்.பி.நரேந்திரன் நாயரிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் எஸ்.பி.நரேந்திரன் நாயர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், வழக்கறிஞர்களுடன் பெரியசாமி ஆஜரானார். அவரிடம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டி.எஸ்.பி. சசிகலா விசாரித்தார். பின்பு பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+