சட்டசபையில் அமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி- குண்டுக்கட்டாக வெளியேற்றாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று கொந்தளித்தனர். அமைச்சர் சுப்ரமணியம் பேச்சுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரையும் காவலர்கள் வெளியே கொண்டு வந்து விட்டனர்.

சட்டசபையில் இன்று காலை அமைச்சர் சுப்ரமணியம் பேசும்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் குறித்துக் குறிப்பிட்டார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரும் எழுந்து அமைச்சரின் பேச்சைக் கண்டித்துக் குரல் எழுப்பினர். மேலும், அவைக் குறிப்பிலிருந்து அதை நீக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து சத்தம் போட்டுப் பேசினர்.

இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றனர்.

நடப்பு சட்டசபையில், அவைக் காவலர்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்படும் முதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+