தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க புதுதிட்டம்: 27ம் தேதி முதல் அமல்
டெல்லி: மொபைல் போனில் வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களை தவிர்க்க மத்திய அரசு எடுத்துள்ள புது நடைமுறை வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடுபடுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், பயன்படுத்துவோருக்கு பல தொல்லைகளும் ஏற்படுகிறது. இந்திய மக்கள் தொகையில், சுமார் 85 கோடிக்கும் மேற்பட்டோர் மொபைல்போன் பயன்படுத்துவதாக தெரிகிறது.
இந்நிலையில் மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பவர்களும் உண்டு.
சில மாதங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே வீட்டுக் கடன் வேண்டுமா சார் என்று கேட்டு ஒரு வங்கியிலிருந்து வந்த அழைப்பு அவரைக் கடுப்பாக்கியதை நாடே அறியும்.
அதுகுறித்த புகார்கள் பெருகி வந்த நிலையில், மத்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம், 'தேவையற்ற அழைப்புகளின் பதிவு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டது.
ஆனால், இந்த முறை நுகர்வோரை முழுமையாக சென்றடையவில்லை. இதையடுத்து தற்போது, "தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு" என்ற புதிய முறை வரும் 27ம் தேதி முதல் அறிமுகப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, 140 என்ற எண்ணை வர்த்தகம், விற்பனை, சேவை விபரங்கள் உள்ளிட்டவைகளை அறிவிக்க மொபைல்போன் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேறு எண்களை பயன்படுத்த கூடாது.
தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க விரும்பும் மக்கள், இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு எந்த தேவையில்லாத அழைப்புகளும் வராது. அதை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications