ஈராக்கில் அடையாள தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு: 8 ராணுவ வீரர்கள் பலி
பாக்தாத்: ஈராக்கில் அடையாள தெரியாத கும்பல் நடத்திய திடீர் தாக்குதலில், 8 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை நிறைவேற்றியது. அப்போது முதல், ஈராக்கில் பல தீவிரவாத அமைப்புகளும் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களை முறியடிக்க ஈராக் தொடர்ந்து போராடி வருகிறது.
ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இருந்து ஹடிதா என்ற நகர் வழியாக ஈராக் ராணுவ வீரர்கள் பயணித்து கொண்டிருந்தனர். காலை நேரத்தில் ராணுவ வீரர்கள் சீருடைகளை அணிந்து கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதிக்கு ஆயுதமணிந்து வந்த சிலர், ராணுவ வீரர்கள் மீது சராமரியாக சுட்டனர்.
இதில், 1 ராணுவ அதிகாரி உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்தியவர்களுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications