காங்கிரஸில் ஐக்கியமான சிரஞ்சீவி புது டிவி தொடங்குகிறார்

நடிகர் சிரஞ்சீவி தீவிர அரசியலில் குதிக்க முடிவு செய்து பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கினார். ஆரம்பித்த சூட்டோடு கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். ஆந்திர காங்கிரஸில் தனக்கென ஒரு பெயர், இடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளார். ஆந்திராவில் காங்கிரஸார் தனித் தனி கோஷ்டிகளாக உள்ளனர். இதில் எந்த கோஷ்டியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
அரசியலுக்கு வரும் சில பெரிய நடிகர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு பெயர் கிடைத்தவுடன் அடுத்து சொந்தமாக ஒரு டிவி சேனலை துவங்குவார்கள். தற்போது சிரஞ்சீவியும் அதைத் தான் செய்யவிருக்கிறார்.
சொந்தமாக ஒரு டிவி சேனல் துவங்க வேண்டும் என்று சிரஞ்சீவி நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தார். அது அதுக்கு கால, நேரம் வர வேண்டும் அல்லவா. தற்போது தான் காலம் கனிந்துள்ளது.
இதையடுத்து எஸ் டிவி என்ற பெயரில் புதிய சேனலைத் துவங்கிவிருக்கிறார்.
என்னடா காங்கிரஸில் சேர்ந்துவிட்டு டிவி சேனலை துவங்குவதில் குறியாக இருக்கிறாரே என்று நினைத்துவிட வேண்டாம். கட்சிப் பணிகளையும் தீவிரமாகத் தான் செய்து வருகிறார். தெலுங்கானா, ராயலசீமா மற்றும் சில மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications