அமெரிக்க உணவு விடுதியில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி, 8 படுகாயம்
கார்சன் சிட்டி: அமெரிக்காவில், உணவு விடுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் மக்கள் மீது சரமாரியாக சூட்டத்தில், 4 பேர் உயிரிழந்தனர். கடைசியில் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் கார்சன் சிட்டி மாகாணத்தில் உள்ள நிவாடா பகுதியில் உணவு விடுதி ஒன்று உள்ளது. அங்கு ஏ.கே.47 வகை துப்பாக்கியுடன் நுழைந்த ஒருநபர், அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது சரமாரியாக சுட்டார்.
இதில், நிவேடா தேசிய பாதுகாப்பு உறுப்பினர்கள் 2 பேரும், 1 பெண்ணும் பலியாயினர். 8 பேர் காயமடைந்தனர். அதன்பின், அந்த மனிதன் தனக்கு தானே சுட்டு கொண்டார். இதில் காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மற்றவர்களை சுட்டு கொன்ற நபர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, 4 பேரின் உயிரை பறித்த நபரின் பெயர், எடர்டோ சென்சின்(32) என தெரிகிறது. எடர்டோ எதற்காக கண்மூடிதனமாக துப்பாக்கி சூடு நடத்தினார் எனத் தெரியவில்லை. எடர்டோவிற்கும், சுட்டு கொல்லப்பட்டவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பாதுகாப்பு படையின் மேஜர் ஏப்ரல் கான்வே என்பவர் கூறியதாவது, சீருடையில் காலை சிற்றூண்டியை சாப்பிட்டு கொண்டிருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.
தாக்குதல் நடத்திய சில நிமிடங்களில் அவன் கடைக்கு வெளியே சுடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான், என்றனர்.
உணவு விடுதியின் உரிமையாளர் கூறியதாவது, சிவப்பு நிற சட்டை அணிந்து துப்பாக்கியுடன் வந்த நபர் கடையின் வெளியே பைக்கில் நின்ற ஒருவரை முதலில் சுட்டான். அதன்பின், கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது சுட்டான். பின்னர், கடையில் இருந்து பொறுமையாக வெளியே வந்த அவர், அங்கு நின்ற சிலர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். அதன்பின் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தொடர்ந்து 20 குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது, என்றார்.












Click it and Unblock the Notifications