முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்
கன்னியாகுமரி: நிலமோசடி புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி தி.மு.க., மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அஜிதா மனோதங்கராஜ். இவருக்கு நாகர்கோவிலை சேர்ந்த தயாபாக்ய சிங் என்பவர் தனக்கு சொந்தமான பத்தரை ஏக்கர் நிலத்தை விலைக்கு கொடுத்தார்.
இதில் ஒரு பகுதி தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதால் வனத்துறையினர் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருவதாக அஜிதா கூறியதால் முதற்கட்டமாக மூன்று ஏக்கர் ஒன்பது சென்ட் நிலம் பவர் எழுதி வாங்கப்பட்டது. மீதமுள்ள நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பணம் கேட்ட போது தயாபாக்யசிங் கொடுக்க மறுத்தார்.
இதையடுத்து அப்போதைய அமைச்சர் சுரேஷ்ராஜனும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷாவும் சேர்ந்து மிரட்டியதாகவும், பின்பு போலியாக ஆவணம் தயாரித்து சரவணபிரசாத் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதிய மறுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனால், இந்த புகாரின் மீது வழக்குப் பதிய நாகர்கோவில் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் இந்த புகார் மீது சுரேஷ்ராஜன், அஜிதா, ஷா ஆகியோர் மீது வழக்குப் பதிய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இவர்கள் மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சுரேஷ்ராஜன் உள்ளிட்ட இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications