செப். 15ம் தேதி திருவள்ளூரில் இலவச, மிக்சி கிரைண்டர் திட்ட தொடக்க விழா
திருவள்ளூர்: தமிழக அரசின் இளவச மிக்சி, கிரைண்டர் திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதியன்று திருவள்ளூரில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து விழா நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர்கள் குழு ஒன்று நேரில் சென்று ஆய்வு செய்தது.
அ.தி.மு.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதாக அறிவித்தது. தேர்தலில் வெற்றி ஆட்சி பொறுப்பேற்றபின், செப்டம்பர் 15ம் தேதி, மேற்கண்ட இலவச திட்டங்களை, தமிழக முதல்வர் திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார்.
இதையடுத்து இலவச திட்டம் துவக்கி வைக்கும் இடத்தை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண் அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி அமைச்சர் ரமணா, சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் மு.சி.சம்பத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர்களுடன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் சாட்டர்ஜி, மாவட்ட எஸ்.பி.,வனிதா ஆகியோர் இருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் தங்கும் விருந்தினர் மாளிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ளும் மக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள், வாகன போக்குவரத்து ஆகியவை குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications