மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறநதார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தான் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை, தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. அவருக்கு சந்துரு, சூர்யா என்ற மகன்கள் உள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான சந்துரு ஆட்டோ ஓட்டி வந்தார். சூர்யா அப்பகுதி ரவுடியாக சுற்றித் திரிந்ததால் பல வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார்.
இந்நிலையில் போலீசார் சந்துருவை அடிக்கடி அழைத்து விசாரித்தனர். நேற்று சந்துருவை தேடிப் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதனால் சந்துருவின் தாய் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சந்துரு இதை கண்டு மனமுடைந்தார்.
போலீசார் முன்னிலையில் வீட்டுக்குள் சென்ற சந்துரு மண்ணெண்ணெய் உடன் வெளியே வந்தார். பின் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த சந்துரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசாரின் தொந்தரவு தாங்க முடியாமல் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். ஆனால் குடும்ப பிரச்சனையால் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications