ம.தி.மு.க.,வின் அங்கீகாரத்தை அழிக்க அரசியல்கட்சிகள் சதி: நாஞ்சில் சம்பத் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
கொத்தமங்களம்: உங்களை பல்லாக்கில் வைத்து தூக்கினோம், உங்களுக்காக பேசினோம். ஆனால் எங்களை தற்போது வெளியேற்றி விட்டீர்கள், என ம.தி.மு.க., கொள்ளை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களத்தில், ம.தி.மு.க.,வின் பொதுகூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் கொள்ளை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "நெல்லையில் தான், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் முக்கிய முடிவுகள் எடுத்துள்ளன.

அதேபோல ம.தி.மு.க.,வின் இந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதுவரை நாங்கள் விதை விதைப்போம், ஆனால் அறுக்கமாட்டோம். உடை நெய்வோம், உடுத்தமாட்டோம். இந்த நிலையில் இனி இருக்கமாட்டோம். கடந்த 7 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக பல்லக்கு தூக்கினோம். அவர்கள் கட்சிக் கூட்டங்களில் பேசினோம்.

ஆனால், இப்போது, ம.தி.மு.க.,வின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய சதியில் தமிழகத்தின் அரசியல்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்தளவிற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+