கலவரம் எதிரொலி- போலீஸ் அறிவுரையை ஏற்று பரமக்குடி செல்லாமல் திரும்பினார் சீமான்
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: பரமக்குடி செல்லவிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், அங்கு நிலவிய கலவரம், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸார் தெரிவித்து அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அங்கு செல்லாமல் மதுரை திரும்பினார்.
பார்த்திபனூர் சென்று அங்கு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் சீமான். இதற்காக அவர் பரமக்குடி கிளம்பினார். ஆனால் அங்கு துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் குறித்து போலீஸார் தெரிவித்து பரமக்குடியில் நிலைமை சரியில்லை, செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து பரமக்குடி செல்லும் திட்டத்தைக் கைவிட்டு விட்டு மதுரைக்குத் திரும்பினார் சீமான்.












Click it and Unblock the Notifications