தம்பி திருமணத்திற்கு நேரில் அழைக்காத வேதனையில் அண்ணன் தூக்குப் போட்டுத் தற்கொலை
சென்னை: திருமணத்திற்கு தம்பி நேரில் வந்து அழைக்காத மனவேதனையில், அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, வண்ணாரப்பேட்டை நல்லப்பவாத்தியார் தெருவை சேர்ந்த அசோகன் என்பவரது மகன்கள் ரூபன் மற்றும் ராஜா. குடும்ப சண்டை காரணமாக, ரூபன் தனது குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றார்.
இந்நிலையில், ரூபன் தம்பியான ராஜாவிற்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ் பத்தோடு பதினொன்று போல ரூபனுக்கும் போஸ்ட் செய்து விட்டனர். நேரில் போய் யாரும் அழைக்கவிலல்லை.
இந்த நிலையில், ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. இதற்காக, உறவினர்கள் அனைவரும் கூடியிருந்தனர். ஆனால் தம்பி கல்யாணத்திற்கு தன்னை நேரில் அழைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட ரூபன், தனது மனைவியையும், மகனையும் திருமண வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று இரவு மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில், கலந்து கொள்ள ரூபனை பலரும் அழைத்தும் வர மறுத்துவிட்டார். ரூபன் இல்லாத நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது மனைவியும் மகனும் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டை திறந்து பார்த்த போது, துக்கம் தாங்க முடியாமல், ரூபன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோரும் மற்றும் உறவினர்களும் மனவேதனை அடைந்தனர். தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தம்பியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கல்யாணத்தை நிறுத்தாமல், இன்று காலை திட்டமிட்டபடி ராஜாவின் திருமணம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications