மருத்துவமனையில் அமர், இன்று ஜாமீன் மனு விசாரணை
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர் அமர் சிங் டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கவிருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க எம்.பி.களுக்கு பணம் கொடுத்த வழக்கில் எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சி முன்னாள் உறுப்பினருமான அமர் சிங் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சங்கீதா ஜாமீன் கொடுப்பது பற்றி இன்று(13-ம் தேதி) தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அமர் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்றிரவு 8 மணி அளவில் அவரை டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சேர்த்ததாக திஹார் சிறையின் செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா தெரிவித்தார்.
முதலில் சிறையில் உள்ள மருத்துவர்கள் அமர் சிங்கை பரிசோதித்துவிட்டு அவரை உடனடியாக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சேர்க்குமாறு பரிந்துரைத்தனர். அதன்படி தான் அவர் மருத்துவமனையில் உள்ளார். அங்கு நெப்ராலஜி துறை தலைவர் டாக்டர் குப்தா அமர் சிங்கிற்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
அமர் சிங்கின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி தான் அவருக்கு ஜாமீன் கோரப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் திஹார் சிறையில் மற்ற கைதிகள் பயன்படுத்தும் பொதுக் கழிவறையை பயன்படுத்துவதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் அமர் சிங்கை தனி அறையில் சுகாதாரமான சூழ்நிலையில் தான் வைத்துள்ளதாக திஹார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமர் சிங்கிற்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவி்ல்லை. முதலில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுக்க மறுத்த அமர் இன்று காலை தான் ரத்தம் கொடுக்க சம்மதித்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications