தண்டவாளத்தில் சிமென்ட் கட்டைகள்: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7 மணி அளவில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருநதபோது சோழபுரம், பாரப்பட்டி பகுதிகளைத் தாண்டி சங்கரன்கோவிலுக்கு 10 கிமீ முன்னதாக தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் இருப்பதைப் பார்த்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
நடுக்காட்டில் திடீர் என்று ரயிலை நிறுத்தியது கண்டு காரணம் தெரியாமல் பயணிகள் தவித்தனர். ரயில் தண்டவளத்தில் சிலிப்பர் கட்டைகள் இருப்பது குறித்து வயர்லெஸ்சில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே ரயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கட்டைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாகக் கிளம்பி செங்கோட்டை நோக்கி வந்தது.
இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பொதிகை ரயிலை கவிழ்க்க நடந்த சதி என்ஜின் டிரைவரின் திறமையால் விபத்து ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications