தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் அதிகரிப்பு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி காரணமாக பாடப்புத்தகங்கள் இல்லாமல் நகன்ற நாட்களை ஈடுகட்ட பள்ளிகளில் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் 2 சனிக்கிழமை வேலை நாள் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிமுக அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து கல்வியாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். இறுதியில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி தான் திறக்கப்பட்டன.
இதே போன்று சமச்சீர் கல்வி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போதுதான் சென்றடைந்துள்ளது. பல தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பள்ளி வேலை நாட்களை ஈடுகட்ட கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த பின்னர் ஒரு கல்வி ஆண்டில் 183 நாட்களுககு பள்ளிகளில் பாடம் நடத்தப்பட வேண்டும்.
சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு பின்னர் 123 நாட்கள்தான் பள்ளிகளை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, எஞ்சியுள்ள 60 நாட்களை ஈடுகட்ட இந்த மாதம் முதல் வரும் ஏப்ரல் வரை மாதத்தில் ஏதாவது இரண்டு சனிக்கிழமை பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications