ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சர் நேரில் ஆறுதல்

சென்னை வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
திணேஷ் திரிவேதியுடன், இணை அமைச்சர் முனியப்பா, ரயில்வே வாரியத் தலைவர் குப்தா ஆகியோரும் உடன் வந்தனர்.
சென்னை வந்த திரிவேதியிடம், விபத்து குறித்துக் கேட்டபோது, நின்ற ரயில் மீது மோதிய ரயில் அதி வேகமாக வந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் விபத்துக்கு முக்கியக் காரணம்.
அந்த ரயிலின் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது சோதனையில் உறுதி செய்யப்படவில்லை.
அந்த ரயிலின் டிரைவர் 16 மணி நேர ஓய்வுக்குப் பின்னர்தான் ரயிலை இயக்கியுள்ளார். எனவே அவர் சோர்வாக இருந்திருக்கலாம் எனக் கூற முடியாது என்றார் திரிவேதி.
இதையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய திரிவேதி சென்னை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்துத ஆறுதல் கூறினார்.
மோதிய ரயிலின் டிரைவர் ராஜ்குமாரும் படுகாயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் திரிவேதி அரக்கோணம் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக அரக்கோணம் ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அவர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விபத்துக்கு மனிதத் தவறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணைக்குப் பின்னரே அது தெரிய வரும் என்றார்..
ரூ. 5 லட்சம் இழப்பீடு
முன்னதாக விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தெற்கு ரயில்வே பொது மேலாளரைத் தொடர்பு கொண்ட அமைச்சர் திணேஷ் திரிவேதி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் அளிக்கப்படும், சாதாரண காயமடைநந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications