முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்: வைகோ
சென்னை: முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எஸ்.அப்பாஸ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டியவர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எஸ். அப்பாஸ் இல்லத்தில் இன்று (15-ம் தேதி) காலையில் அத்துமீறி தீயநோக்கத்துடன் மர்ம நபர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாட்டு உரிமைகளை காப்பாற்ற அப்பாஸ் கடுமையாக போராடி வருகிறார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு அன்மையில் முடிவு செய்துள்ளது. இடைவிடாது தமிழ்நாட்டுக்காகப் போராடி வருபவர் அப்பாஸ். அவருக்கு பெரும் கேடு செய்யும் நோக்குடன் முயற்சி நடந்திருப்பதாகவே அஞ்சுகிறேன்.
எனவே, காவல் துறையினர் இந்த பிரச்சனையில் மிகத்தீவிர கவனம் செலுத்தி விசாரணை செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? அவர்களைத் தூண்டி விட்டவர்கள் யார்? இதன் பின்னணி என்ன என்பதைத் துப்பு துலக்கி கண்டுபிடித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications