மோடிக்கு போட்டியாக காங்கிரஸ் 'ஏட்டா போட்டி' உண்ணாவிரதம்!
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு போட்டியாக தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர் சிங் வகேலா அறிவித்துள்ளார்.
மோடியின் உண்ணாவிரதம் தொடங்கும் செப்டம்பர் 17ம் தேதியன்றே வகேலாவும் காங்கிரசாரும் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
வகேலாவுடன் தேசிய அளவிலான சில காங்கிரஸ் தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிகிறது.
மோடியைவிடக் கூடுதலாக இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் வகேலா அறிவித்துள்ளார்.
முன்னதாக அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நரேந்திர மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நாளே இந்தப் போராட்டத்தை மோடி அறிவித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அத்வானி, அருண் ஜேட்லி ஆகிய மூத்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications