2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சு.சாமி மனு!

நீதிபதி ஓ.பி.சைனியிடம் அவர் தாக்கல் செய்த மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தைப் பார்த்தால்,
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் விற்பது என்ற முடிவு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு என்பதும், இதில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் உறுதியாகிறது.
அப்போதைய நிதியமைச்சர் என்ற முறையில் ப.சிதம்பரத்துக்கும் இதில் தொடர்புள்ளது. இதனால் அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
இந்த வழக்கில் என்னையும் சாட்சியாக சேர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை முழுமையானதாக இல்லை. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தால் என்கிறபோது, அவரது பெயரை விட்டுவிட்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சரியல்ல.












Click it and Unblock the Notifications