திருச்சி மேற்கு தொகுதியில் எல்லா வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை-தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil

இந்தத் தேர்தல் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரவீன்குமார் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திருச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பிற்கு மத்திய அரசின் பாதுகாப்புப் படையினரின் உதவி கோரப்படும்.
நடந்து சட்டமன்ற தேர்தல் போன்று அதிகாரிகள் வாயிலாக பூத் சிலிப்புகள் வழங்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையத் தள கேமரா வைக்கப்படும். இந்தத் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றமானவை தான்.
தற்போது பார்வையாளர்கள் சாவடிகளைக் கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் பார்வையாளர்கள் வந்த பிறகு முழுத் தகவல்கள் தெரியும்.
தேர்தலில் பணம் விளையாடுவது கடந்த சட்டமன்றத் தேர்தலை விட பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications