பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறங்கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க மீண்டும் சதி நடந்தது. அதி்ர்ஷ்டவசமாக போலீசார் முன் கூட்டியே கண்டுபிடித்து அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து கடந்த 13ம் தேதி செங்கோட்டை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கான்கீரிட் சிலிப்பர்களை வைத்து கவிழ்க்க சதி நடந்தது. லோகை பைலட்டின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
தமிழக ரயில்வே ஐஜி சுனில்குமார் நேற்று மாலை சங்கரன்கோவில் வ்ந்து ரயிலை கவிழ்க்க சதி நடந்த இடத்தை பார்வையிட்டார். அவருடன் விருதுநகர் மாவட்ட எஸ்பி நஜ்முல் ஹோடா, ரயில்வே எஸ்பி தமிழ்சந்திரன், மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர். பின்னர் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு ஐஜி சுனில்குமார் சென்று நாசவேலையில் ஈடுபட்ட மர்ம கும்பலை கைது செய்வதற்கான வியூகம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நெல்லை புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று மீண்டும் கவிழ்க்க சதி நடந்தது. செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை ரயில் நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்டது. 8 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இலவன்குளம்-மனலூர் இடையே சென்றபோது தண்டவாளத்தில் பாறங்கல் வைத்திருந்ததை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நடுக்காட்டில் திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலா நின்றதற்கான காரணம் தெரியாமல் பயணிகள் பீதி அடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் பாறங்கல்லை அப்புறப்படுத்தினர். மேலும் தண்டவாளத்தில் வேறு இடங்களில் நாசவேலை நடந்துள்ளதா என தீவிரமாக சோதனையிடப்பட்டது. தொடர்ந்து மீண்டும் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. சுமார் 10 நிமிடம் தாமதத்திற்கு பிறகு பொதிகை எக்ஸ்பிரஸ் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு சென்றது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications