வைகோவை சந்தித்து நன்றி கூறிய ஜான்பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த ஜான் பாண்டியன், அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோவை சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கலவரங்களுக்குப் பின் மதிமுக பொதுச் செயலர் வைகோவை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் சந்தித்து பேசினார்.
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது பரமக்குடி கலவரத்தில் காயமடைந்த ஒருவருக்கு நிதியுதவி அளித்த வைகோவிற்கு, ஜான் பாண்டியன் நன்றி தெரிவி்த்துக் கொண்டார்.
மேலும், அந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுப்பியதற்கும் நன்றி தெரித்தார் என செய்திகள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications