காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அமைந்தால் மகிழ்வேன்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காங்கிரஸ் கட்சிக்கும், தேமுதிகவுக்கும் இடையே கூட்டணி அமைந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாரிடம் இன்று விருப்ப மனுக்களை நேரில் பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது செய்தியாளர்கள் தேமுதிகவுடன் கூட்டணி அமையுமா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அப்படி ஏற்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார் இளங்கோவன்.
மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகள் குறித்து இன்னும் 2 நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது உள்ள அதிகாரம் போதுமானதல்ல. அது அதிகரிக்கப்படும். கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications