தேமுதிக எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டு மல்லர் கழகத்தினர்ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை தேவையில்லை என்று பேசிய தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் தேமுதிக எம்.எல்.ஏ. சுந்தரராஜன் வீட்டை முற்றுகையிட்டு மல்லர் கழகத்தி்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவையில்லை என்று பேசியதாக தாழ்த்தப்பட்ட அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதி தேமுதிக வேட்பாளர் சுந்தரராஜன் வீட்டை மல்லர் கழகம் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications