வட கிழக்கு மாநிலங்களில் 20 ஆண்டுகளில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம்
ஷில்லாங்: வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தை மையமாகக் கொண்டு நேற்று மாலை தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிக்கிமில் மட்டும் 13 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் 5 பேர் இறந்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் வட கிழக்குப் பிரதேசத்தை தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இதுதான். மேலும் இப்பிராந்தியத்தில் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிந்றன. கடந்த 2009ம் ஆண்டில் இங்கு மொத்தம் 34 முறை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. 2008ல் 26 முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. 2006ல் இது 23 ஆக இருந்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி 6.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் இந்திய, மியான்மர் எல்லைப் பகுதியில், மணிப்பூர் மாநிலத்தில் தாக்கியது. அதேபோல 1988ம் ஆண்டு வட கிழக்கில், 6.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.
2000மாவது ஆண்டு அக்டோபர் 11ம் தேதி இதே பகுதியில் 6 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. மேலும் 2009, செப்டம்பர் 21ல் 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் பூடானைத் தாக்கியது. அதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும் உலகிலேயே மிக மோசமான பூகம்பத்தை சந்தித்தது ஷில்லாங்தான். 1950ம் ஆண்டு தாக்கிய இந்த பூகம்பத்தின் அளவு 8.5 ரிக்டராக இருந்தது.
அதேபோல 1897ல் ஷில்லாங் பகுதியில் நடந்த மிகப் பெரிய பூகம்பத்திற்கு 1542 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications