நில மோசடி வழக்குகளுக்கு தனி டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜிக்கள் நியமனம்
மதுரை: நில மோசடி வழக்குகளை கண்காணிக்க தனியாக டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி. பதவிகளை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி அமைந்த பிறகு திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுக்க இதுவரை சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
மேலும் புகார்கள் அதிகரிக்கவே, நில மோசடிகளை மட்டும் விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவை தமிழக அரசு அமைத்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் குறைந்தது 7 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி திமுகவைத் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என். நேரு, என்.கே.கே.பி.ராஜா மற்றும் பல முன்னாள் எம்எல்ஏக்களை இந்த பிரிவு போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் நில மோசடி வழக்குகளை கண்காணிக்க தனியாக டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி. பதவிகளை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்படி, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி.யாக இருந்த திருஞானம், நில மோசடி பிரிவுகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல எஸ்.பி. பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பதவிக்கு இதுவரை யாரையும் அரசு நியமிக்கவில்லை. இவர்கள் சென்னையில் இருப்பார்கள்.
மாநிலம் முழுவதும் உள்ள நில மோசடி வழக்குகளை இவர்கள் கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications