அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலாபிஷேகம் செய்த அதிமுக.வினர்

Subscribe to Oneindia Tamil

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை சுத்தம் செய்த அதிமுக.வினர், சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவியது. அதையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் இருந்த தேவர் மற்றும் அம்பேத்கார் சிலைகளுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பி.ஏ.சி.ஆர். சாலை மற்றும் வடக்கு மலையம்பட்டி பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகள் மீது அவமதிப்பு செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலையில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தபின் அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைகளை சுத்தம் செய்தனர். அதன்பின் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கினர். அதன்பின் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறியதாவது, அ.தி.மு.க. அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்தில் இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளின் உத்தரவின்பேரில் அமைதி காத்து வருகிறோம், என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+