பூகம்பத்தைப் பயன்படுத்தி ஜல்பைகுரி சிறையிலிருந்து தப்ப கைதிகள் முயற்சி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சிக்கிமை மையமாகக் கொண்டு நேற்று மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி துமளியைப் பயன்படுத்தி மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில்,உள்ள சிறையிலிருந்து தப்ப கைதிகள் முயன்றனர்.

இங்குள்ள சிறையின் கதவுகள், ஜன்னல்கள், பூகம்பத்தால் சேதமடைந்தன. இதையடுத்து அங்கு அடைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 1100 கைதிகளும் தங்களது அறையை விட்டு வந்து விட்டனர். பின்னர் அவர்கள் சிறையிலிருந்து வெளியேறவும் முயற்சித்தனர்.

இருப்பினும் சிறைக் காவலர்களும், வார்டன்களும் அவர்களைத் தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கூடுதல் போலீஸாரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு கைதிகள் தப்பாவண்ணம் பார்த்துக் கொண்டனர்.

மேலும் ஒளிவெள்ள விளக்குகளும் முழுமையாக ஆன் செய்யப்பட்டு சிறை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+