ஜார்க்கண்டில் பேருந்து, லாரி பயங்கர மோதல்: 20 பேர் பலி, 25 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தி்ல பேருந்தும், இரும்புக் கம்பிகள் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரியும் மோதிக் கொண்டதில் 20 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூரில் இருந்து பீகார் மாநிலம் ஆராவுக்கு ஒரு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்து இன்று அதிகாலை 3. 30 மணி அளவில் ராஞ்சியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள புண்டு என்ற இடத்துக்கு அருகில் சென்று கொண்டிருக்கையில் இரும்புக் கம்பிகள் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரியுடன் பயங்கரமாக மோதிக் கொண்டது.

இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இந்த தகவலை ரான்ச்சி எஸ்பி ஏவி மின்ஸ் தெரிவித்தார்.

பேருந்தும், டிரெய்லரும் மோதியதில் இரும்புக் கம்பிகள் பேருந்துக்குள் பாயந்ததினால் தான் பலர் உயிர் இழந்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயம் அடைந்த 25 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அண்மைக் காலங்களில் ஜார்க்கண்டில் நடந்த மோசமான சாலை விபத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+