அணுமின் நிலையம் குறித்து கூடங்குளம் மக்களின் கருத்தைக் கேட்காதது தவறு- விஜயகாந்த்
இடிந்தகரை: அணு மின் நிலையம் அமைப்பதற்கு முன்பு கூடங்குளம் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காதது தவறு என்று தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் நடைபெற்றுவரும் தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளவர்களை ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனிநபருக்கு நிலப்பட்டா வழங்க அரசு அதிகாரிகள் எத்தனையோ கேள்வி கேட்கிறார்கள், விசாரிக்கிறார்கள். ஆனால் மக்களைப் பாதிக்கக்கூடிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு முன்னர் மக்கள் கருத்தைக் கேட்கவில்லை. மக்கள் விரும்புவதைச் செய்யுங்கள். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைச் செய்யாதீர்கள் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
போராட்டத்தை நடத்தி வரும் மருத்துவர் உதயகுமார், வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் என்னிடம், இப்பிரச்னை குறித்து பேச மத்திய அரசு நடுவர் குழுவை அமைக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். நிச்சயமாக செய்வேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications