வண்டலூர் பூங்கா பராமரிப்பு பணியின் போது தப்பிய 7 அடி மலேசியப் பாம்பு- மீண்டும் பிடித்து அடைத்தனர்

Subscribe to Oneindia Tamil

வண்டலூர்: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்ணாடி கூண்டு ஒன்றை சுத்தம் செய்த போது, அதில் இருந்த மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 7 அடி நீள விஷப் பாம்புதப்பி ஓடி விட்டது. இதையடுத்து அதை வலை வீசி தேடிப் பிடித்து மீண்டும் கூண்டில் அடைத்தனர்.

சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அரிய வகை விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை பார்வையாளர் காணும் வகையில் இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட கூண்டுகளில் அடித்து வைக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 45க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்ணாடி கூண்டிற்கு அடித்து வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 14 மலைப்பாம்புகளில் ஒன்று, கடந்த ஜூலை மாதம் முட்டையிட்டு 7 குஞ்சுகளை பொறித்தது.

பாம்புகளின் கூண்டுகளை அவ்வப்போது சுத்தம் செய்வதற்காக இடமாற்றம் செய்வது வழக்கம். நேற்றுமுன்தினம் கண்டு கூண்டுகளை சுத்தம் செய்த போது, 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிவிட்டது. இது சென்றதாக சந்தேகிக்கப்படும் காட்டு பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் பாம்பு வேட்டையில் இறங்கினர்.

தேடுதல் வேட்டை நடத்திய குழுவினர் பிடித்து திரும்ப கூண்டில் அடைத்துவிட்டதாக, பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+