சாலைகள் பெரும் பாதிப்பு.. ஸ்தம்பித்தது போக்குவரத்து... பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்களில் சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மழை மேலும் தொடர்ந்தால் நாளையும் விடுமுறை அறிவிக்குமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தெற்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ஆங்காங்கே சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்றிரவு 10 மணிக்கு பெய்த மழை இன்று வரை சாரலுடன் பெய்து வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுவதாலும், பல இடங்களில் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடபழனி, ஈக்காடுதாங்கல், வளசரவாக்கம் பகுதிகளில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமுல்லைவாயல், அம்பத்தூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் பெருமளவு வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை. இதனால் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே கல்லூரிகளுக்கு வந்தனர்.
சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் வேலையும், புறநகர்களில் பாதாள சாக்கடை அமைக்கு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் மேம்பாலம், ரயில்வே மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. இந்த மழை காரணமாக அந்தப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட சாலை அல்லது தெருக்கள் சகதிமயமாகி பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆகியுள்ளன.
மொத்தத்தில் இந்த மழைக்காலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போக்குவரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அரசு புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமா?
-
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications