4 மாதமாக சம்பளமி்ன்றி பணியாற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள்: அரசு உதவுமா?
நெல்லை: மாநில நிதிக்குழு மானியம் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தமிழகத்தில் பஞ்சாயத்து ஊழியர்கள் சம்பளம் இன்றி பணியாற்றி வருகின்றனர்.
கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தை சீராக நடத்தும வகையில் பஞ்சாயத்துகளில் கிளார்குகள், டேங்க் ஆபரேட்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரி வசூல் பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு, அடிபம்பு ஆகியவறறுக்கான அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை பஞ்சாயத்து கிளார்க்குகள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சுமார் ரூ. 6 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
தெருக்களை சுத்தம் செய்தல், சாக்கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட சுற்றுப்புற பராமரிப்பு பணிகளை செய்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ. 1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பஞ்சாயத்துகளில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு ரூ. 2000 ஊதியமாக வழங்கப்படுகிறது. பஞ்சாயத்து நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தகைய பணியாளர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் மாநில நிதிக்குழு மானியம் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தான்.












Click it and Unblock the Notifications