விருப்பம்போல் கட்டணம் வசூலிக்க அனுமதி வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை: திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை தமிழக அரசு உயர்த்த கூடாது, என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், சென்னையில் நேற்று காலை நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசு தற்போது மாநகராட்சிகளுக்கு 30 சதவீதமாகவும், மற்ற ஏரியாக்களுக்கு 20 சதவீதமாகவும் விதித்துள்ள கேளிக்கை வரியினை திரையரங்குகளின் இன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா 10 சதவீதமாக குறைத்து வழங்க வேண்டும்.
அந்த கேளிக்கை வரியை திரையரங்குகளின் நுழைவு கட்டணத்தில் இருந்து சேர்த்து வசூலித்து கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறோம்.
திருட்டு வி.சி.டி.யை அறவே ஒழிக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள சரித்திர சிறப்புமிக்க நடவடிக்கைக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறோம்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலத்தில் ஆணையிட்டு வழங்கியதைப்போல் புதிய திரைப்படங்கள் வெளியான முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகளுக்கான நுழைவு கட்டணத்தை திரையரங்குகளே நிர்ணயித்துக்கொள்ள மீண்டும் அனுமதி அளித்து ஆணை வெளியிடும்படி, தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மான விவரங்களை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, நிருபர்கள் மத்தியில் படித்தார்.
அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், கில்டு தலைவர் ஹேம்நாக்பாபு, டைரக்டர்கள் சங்க துணைத்தலைவர் சேரன், செயலாளர் அமீர், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications