சென்னை மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் செல்போன் திருடிய டாக்டர் கைது
சென்னை: தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் மொபைல்போன்களை திருடிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துமனையின் அறுவை சிகிச்சை அறையில் இருந்து பல டாக்டர்களின் மொபைல்போன்கள் திருட்டு போயின. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்தது.
இதுகுறி்த்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். இதில் மருத்துவமனை டாக்டர் ஒருவர் மொபைல்போன் திருட்டில் ஈடுபடுவது தெள்ள தெளிவாக பதிவாகி இருந்தது.
விசாரணையில் திருவல்லிக்கேணியில் வசிக்கும் எலும்பு முறிவு டாக்டரான பிரகாஷ் நாராயணன் என்பவர் தான் திருட்டில் ஈடுபட்டது என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 திருட்டு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அதன்பின் பிரகாஷ் நாராயணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையி்ல அடைத்தனர்.












Click it and Unblock the Notifications