பாகிஸ்தானில் பஸ் பயணிகள் மீது துப்பாக்கி சூடு: 29 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மர்ம குழு நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில், 29 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் சன்னி முஸ்லீம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு முஸ்லீம் மதத்தின் மற்றொரு பிரிவினரான ஷியா பிரிவினரிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். கடந்த சில நாடகளுக்கு முன் நடந்த மோதலில் 30 பேர் பலியாகினர்.
இந்நிலையில் நேற்று, பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாநிலத்தில் மஸ்டங் மாவட்டத்தில் நேற்று ஷியா பிரிவினரில் 40 பேர் பயணித்த பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பாதுகாப்பு வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், கலஸ்கினிகோவஸ் என்ற இடத்திற்கு அருகே வந்த போது, 8 பேர் கொண்ட கும்பல் பஸ்சை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் துப்பாக்கிகளோடு பஸ்சிற்குள் நுழைந்த அந்த கும்பல் மக்களை நோக்கி சராசரியாக சுட்டனர். இதில் பஸ்சில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பி பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.
அதன் தொடர்ச்சியாக சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள குவிட்டா என்ற பகுதியிலும் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த 2 சம்பவங்களில் மொத்தம் 29 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications