ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 நாட்களாக 144 தடை உத்தரவு
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று பத்து நாட்கள் ஆகியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கிராம மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கொடுமாலூர் சென்ற ஜி.ராமகிருஷ்ணன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தீர்ப்புக்கனியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25 ஆயிரம் நிதி உதவியை தீர்ப்புக்கனியின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பரமக்குடிக்கு வருவார்கள் என்று போலீசாருக்கு தெரியும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவர்களின் கடமை. ஆனால் அதை விடுத்து துப்பாக்கி சூடு நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 10 நாட்கள் ஆகியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிரம் பேரை தேடுகிறோம் என்று போலீசார் இரவு நேரங்களில் கூட வீடு வீடாக செல்கின்றனர். அவர்களை பார்த்து பயந்து ஓடியதில் ஒரு சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே 144 தடை உத்தரவை விலக்க வேண்டும்.
குண்டு பாய்ந்து பலியானவர்கள் 6 பேராக இருந்தாலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நீதி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொடர்புடைய காவல்துறையினரை பணிஇடைநீக்கம் செய்யவேண்டும். மதுரை சிந்தாமணியில் துப்பாக்கிசூடு நடத்தியதற்கும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பரமக்குடி செல்லும் முன்பாக அவர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications