கோவையில் நில அபகரிப்பு புகாரின் பேரில் ரூ. 7.19 கோடி நிலம் மீட்பு - கமிஷனர் தகவல்
கோவை: கோவையில் நிலஅபகரிப்பு புகாரின் பேரில் 7.19 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக கோவை போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமிஷனர் அமரேஷ் புஜாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிலஅபகரிப்பு தொடர்பான புகார்களை என்னிடமும் (கமிஷனரிடம்) கொடுக்கலாம். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட விசாரணை பிரிவுக்கு அனுப்பப்படும்.
சமீப காலமாக சிவில் தொடர்பான மனுக்கள் அதிகமாக வருகின்றன. எனவே, நிலஅபகரிப்பு தொடர்பான புகார் மனுக்களை பரிசீலக்க போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் (தலைமையிடம்) விவேகானந்தன், உதவி கமிஷனர் (நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு) செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஒவ்வொரு வாரமும் கூடி, புகார் மனுக்களை பரிசீலித்து சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை தனியாக பிரித்து, புகார் தாரர்களை அழைத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறிவுறுத்தப்படும். மோசடி சம்பந்தப்பட்டது என்றால் மட்டும் விசாரித்து, எப்.ஐ.ஆர். நகல் வழங்கப்படும்.
கோவை மாநகர போலீசார் இதுவரை 269 நிலஅபகரிப்பு புகார் மனுக்களை பெற்றுள்ளனர். இதில் 132 மனுக்கள் சிவில் சம்பந்தப்பட்டவை, ஏழு மனுக்கள் பிற மாவட்ட போலீஸ் விசாரணை சம்பந்தப்பட்டவை.
இவற்றில் 40 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 176 புகார் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. கோவை மாநகரில் நில அபகரிப்பு புகாரின் பேரில் 7.19 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications