ஏற்காட்டில் துப்பாக்கிகளுடன் 7 பேர் ஊடுறுவல்- நக்சல்கள் இல்லை என போலீஸ் தகவல்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் குப்பனூர் என்ற கிராமத்திற்கு அருகே மலைக்குகள், துப்பாக்கிகளுடன் 7 பேர் ஊடுறுவியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் குதித்தனர். இதில் நக்சலைட் ஊடுறுவல் எதுவும் இல்லை என தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள கிராமம் குப்பனூர். இந்தக் கிராமத்திற்கு அருகே 7 பேர் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மலைக்குள் போய் விட்டனர். இதைப் பார்த்த கிராம மக்கள் பீதியடைந்தனர். வந்தவர்கள் நக்சலைட்களாக இருக்கலாம் என அச்சமடைந்த அவர்கள் உடனடியாக சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் 50க்கும் மேற்பட்ட போலீஸார், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் குப்பனூர் விரைந்தனர். தேடுதல் வேட்டைக்குப் பின்னர் போலீஸ் தரப்பில் கூறுகையில், நக்சலைட் ஊடுறுவல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நிச்சயம் நக்சலைட்கள் யாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+