தட தடத்த உலக பங்குச் சந்தைகள்... சென்செக்ஸில் 740 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அனைத்தின் பங்குச் சந்தைகளும் இன்று வீழ்ச்சி கண்டன.
இந்தியாவின் சென்செக்ஸ் 740 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. பிற்பகல் நிலவரப்படி 744 புள்ளிகளை இழந்து 16318 ஆக இருந்தது சென்செக்ஸ். தேசி பங்குச் சந்தை நிப்டியில் 219 புள்ளிகள் இழந்து 4932.30 ஆக உள்ளது.
உலோகத்துறை பங்குகள்தான் இன்று அதிக வீழ்ச்சிகண்டன. 505 புள்ளிகளுக்கும் மேல் இந்தத் துறை நிறுவனங்கள் இழந்தன. ஆட்டோமொபைல், முதலீட்டுப் பொருள், ரியல் எஸ்டேட், வங்கி, ஐடி என அனைத்துத் துறையிலும் பங்குகள் நஷ்டத்தில் கைமாறின.
சர்வதேச அளவில் சீனா, கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பாவின் டாக்ஸ், எப்டிஎஸ்இ, சிஏசி போன்ற பங்குச் சந்தைகளும் இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
ஏன் இந்த சரிவு?
அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாக அந்நாட்டு நிதித் துறை அறிவித்துள்ளதன் அதிர்வலைகள் உலகம் முழுவதும் ஏற்படுத்திய மோசமான விளைவுதான் இந்த பங்குச் சந்தை சரிவு என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications