மதுரை மாநகராட்சி மேயர்-திமுக வேட்பாளர் பாக்கியநாதன்; சேலத்துக்கு பனைமரத்துபட்டி ராஜேந்திரன்?
சென்னை: திமுக சார்பில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பாக்கியநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக மதுரை மாநகராட்சி மற்றும் 28 நகராட்சிகளுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளராக மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமான கவுஸ் பாட்சா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் அடிமட்டத் தொண்டரான பாக்கியநாதன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் 28 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் நகராட்சிக்கு திமுக மாநில மகளிர் அணித் தலைவியான நூர்ஜஹானும், தென்காசிக்கு சீதா லட்சுமியும், செங்கோட்டைக்கு ரஹீமும், வீ.கே.புரத்துக்கு ராஜம் ஜானும், தேவகோட்டைக்கு ஜோன் ரூசோவும், காரைக்குடிக்கு பாண்டி மீனாளும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பாவும், தேமுதிக சார்பில் கவியரசும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் சாதாரண தொண்டரும் முன்னாள் கவுன்சிலருமான போ. பாக்கியநாதனை, திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி நிறுத்தியிருப்பது கட்சி தொண்டர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.
இதன்மூலம் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பதவிகள் பெற முடியும், கட்சியின் சாதாரண தொண்டர்களுக்கு கட்சியில் மரியாதையில்லை என்ற குறையை அழகிரி போக்க முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், சர்வ பலம் பொறுந்திய ராஜன் செல்லப்பாவை எதிர்க்கும் அளவுக்கு பாக்கியநாதனுக்கு பலம் உண்டா என்ற சந்தேகமும் திமுகவினரிடையே எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தை நிறுத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முயன்றார். ஆனால், அதைத் தடுத்துவிட்ட அழகிரி, பாக்கியநாதனுக்கு சீட் பெற்றுத் தந்துள்ளார்.
சேலம் வேட்பாளர் பனைமரத்துபட்டி ராஜேந்திரன்?:
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார். இதனால் அந்த மாநகராட்சியின் மேயர் வேட்பாளரை திமுக இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சேலம் மேயர் வேட்பாளராக பனைமரத்துபட்டி ராஜேந்திரனை அறிவிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் வீரபாண்டி ஆறுமுகம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதே போல திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளரையும் திமுக அறிவிக்க வேண்டியுள்ளது.
விடுபட்ட இடங்களுக்கான மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் பட்டியல், இன்றோ, நாளையோ இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். திங்கட்கிழமை முதல் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications