உள்ளாட்சி தேர்தல் வருவதால் திருச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்- ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 17-ம் தேதி உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரத்திலேயே இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்பதால் அது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாமல் தவிர்க்க அதன் வாக்கு எண்ணிக்கையை அக்டோபர் 19-ம் தேதிக்குப் பிறகு நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications