கரூரில் அதிமுக நகராட்சித் தலைவர் வேட்பாளர் 'தமிழ்நாடு' செல்வராஜ் வேட்புமனு தாக்கல்
கரூர்: கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்நாடு செல்வராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கரூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்நாடு செல்வராஜ் என்பவரை அதிமுக தலைமை வேட்பாளராக அறிவித்து. இந்நிலையில் இன்று மதியம் கரூர் நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்தனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரூர் நகராட்சிக்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இனாம் கரூர் நகராட்சி நகர் மன்ற தலைவராக தமிழ்நாடு செல்வராஜ் ஏற்கனவே பதவி விகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
தற்போது, கரூர் நகராட்சி என்பது கரூர் நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி, தாந்தோனி நகராட்சி சணப்பிரட்டி பஞ்சாயத்து ஆகியவைகளை கொண்டதாகும். மொத்தம் 48 வார்டுகளை உள்ளடக்கியது. கரூர் நகராட்சியை பொறுத்தவரை நகர் மன்ற தலைவருக்கு 1 ஓட்டும், கவுன்சிலருக்கு 1 ஓட்டும் என மொத்தம் 2 ஓட்டு போட வேண்டும்.












Click it and Unblock the Notifications