உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுடன் குடியரசுக் கட்சி, பார்வர்ட் பிளாக், முஸ்லீம் லீக் தொகுதி உடன்பாடு

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அதிமுக எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்ககையில் கூறியிருப்பதாவது:
17.10.2011, 19.10.2011 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இடப்பங்கீடு குறித்து, அதிமுகவுக்கும், தோழமைக் கட்சியான டாக்டர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ.வை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய குடியரசுக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே போல், அதிமுகவுக்கும் தோழமைக் கட்சியான பி.வி.கதிரவனை தமிழ் மாநில பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு இடையேயும்,
எஸ்.ஷேக் தாவூதை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு இடையேயும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுகவுடன் விடாமல் பேச்சு நடத்தி வந்த தா.பாண்டியனை மாநிலச் செயலாளராக் கொண்டு செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து இதில் எந்தத் தகவலும் கூறப்படவில்லை.
இந் நிலையில் தான் இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு வெளியானது.












Click it and Unblock the Notifications