பரமக்குடி நீதிவிசாரணை- கருப்புக் கொடி போராட்டத்தால் நீதிபதி சம்பத் பாதியிலேயே திரும்பினார்

தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜைக்காக செப்டம்பர் 11-ம் தேதி பரமக்குடி சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி சம்பத் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக பரமக்குடி சென்ற நீதிபதி செவ்வாய்கிழமையன்று மூன்று பேரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் ம.பச்சேரி என்ற கிராமத்தில் உயிரிழந்த பள்ளி மாணவன் பழனிக்குமார் வீட்டிற்கும் நீதிபதி செல்வதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து புதன்கிழமையன்று காக்கநேந்தல், வல்லவராயநேந்தல், மற்றும் மஞ்சூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நீதிபதி சம்பத் சந்திப்பதாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாளாக ம.பச்சேரி கிராமத்தில் வீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்ததால் அவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் காக்கநேந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லாமலேயே நீதிபதி சம்பத் மதுரை திரும்பினார்.
நீதிபதியின் இந்த செயலுக்கு பரமக்குடி ஐந்துமுனை அருகே உள்ள பொன்னையாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்த வந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்றது நியாயம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரை சென்றுள்ள நீதிபதி சம்பத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 14 பேரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளார்.
இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சென்னை அடையாறு முன்னாள் உதவி ஆணையர் செந்தில் வேலனிடமும் நீதிபதி சம்பத் விசாரணை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications