சேலம் மாநகராட்சியில் சீட் மறுத்ததால் கட்சியில் இருந்த விலகிய தி.மு.க மூத்த கவுன்சிலர்
சேலம்: சேலம் மாநகராட்சியில் 3 முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அஸ்தம்பட்டி நடேசனுக்கு சீட் வழங்காததால் அவர் தி.மு.க.வில் இருந்து விலகினார்.
சேலம் அஸ்தம்பட்டி தி.மு.க. செயலாளராக உள்ளவர் நடேசன். 14வது வார்டில் தி.மு.க. சார்பில் கடந்த 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலும், 2006ல் மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்.
ஆனால் தற்போது இவருக்கு தி.மு.க. தலைமை சீட் மறுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த நடேசன், தி.மு.க.-வுக்கு விட்டு விலகி, சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து நடேசன் கூறியதாவது, தி.மு.க.-வில் பல ஆண்டாக உழைத்தும், திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர். கட்சியில் இருந்து வெற்றி பெற்றால், அந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக சொல்வார்கள். அதனால் தான் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுயேட்சையாக போட்டியிடுகிறேன்,என்றார்.












Click it and Unblock the Notifications